"எதிர் காலத்தில் இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தனித்துவம் மிகுந்த இசைவடிவம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது மிகவும் எளிதாக ஹிப்பாப் பாணியில் இசையமைத்து விடலாம். ஆனால் அப்படி செய்துக்கொண்டிருந்தால் நமக்கென்று ஒரு பாணியை உருவாக்க முடியாமல் போய்விடும் என்று நினைக்கிறேன்

நாம் எல்லோரும் இப்பொழுது புதிய தொழில் நுட்பத்திற்கு மாறிவிட்டோம். மேலும் இசையில் புகுத்தப்படவேண்டிய தொழில் நுட்பத்தைப் பற்றியும்,புதுமையைப் பற்றியும்,இளமைத்தனம் பற்றியும் நாம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறோம்.

இந்த தருணத்தில் தனித்துவத்தை நோக்கி நம் எண்ணங்கள் ஒன்று படுமானால் நம்முடைய இசை அகில உலகையே ஆளும் இசையாக மாறிவிடும்.நாம் எல்லோரும் நம் மனங்களை ஒன்றுபட செய்தோமானால் இதை நாம் நிச்சயமாக சாதித்துவிட முடியும்."

-பண்பலை வானொலி 'ரேடியோ சிடி' பேட்டியில் ஏ .ஆர் .ரஹ்மான் சொன்னது.

என் ஆதங்கம்:

இனிமேலாவது நம்முடைய தமிழ், தெலுங்கு, மலையாள, இந்தி இசையமைப்பாளர்கள் காப்பியடிக்காமல் சொந்தமாக இசையமைத்து ஒரு தனித்தன்மையை உருவாக்க முன்வருவார்களா?

Newer Posts Older Posts Home