பின்னணி இசையில் முன்னணியில் இருந்த பல இசைக் கலைஞர்கள் இன்று வயதாகிவிட்ட காரணத்தால் நலிவுற்று இருக்கிறார்கள எனபதைக் கேள்விப் பட்டது இந்த இசை உள்ளம் .
மனம் பதபதைத்தது. அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டுமே என்று துடிதுடித்தது. உடனே அதற்கான முயற்சியில் இறங்கியது.
ஐம்பது வயதிற்கு மேற்பட்ட நலிவடைந்த இசைக்கலைஞர்கள் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ25000 அளித்து மகிழ்ந்திருக்கிறது இந்த இசை உள்ளம்.
விழா இல்லை , விளம்பரம் இல்லை. செய்ய நினைத்த உதவியை செய்து முடித்து விட்டு எப்போதும் போல் புன்னகத்துக்கொண்டு இருக்கிறது இந்த இனிய இதயம்.
நன்றி : நக்கீரன்

1 comments:

10 ரூபாய் கொடுத்தாலே விளம்பரம் தேடும் இந்த உலகில் தான் ஒரு சிறந்த மனிதாபிமானி என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் நமது இசைப்புயல்.

May 9, 2008 at 10:34 PM  

Newer Post Older Post Home